Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மகளிர் சுய உதவிக் குழு தலைவி கைது

ஜுன் 22, 2019 07:59

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மகளிர் சுய உதவிக் குழு தலைவியை போலீசார் கைது செய்தனர்.

அரியமங்கலம் சீனிவாசன் நகரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் லட்சுமி தம்பதி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை தங்களது பெயர்களில் சுய உதவிக் குழுக்களில் பணம் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக சில ஆயிரம் ரூபாய் பணத்தை அந்தத் தம்பதிக்கு பூங்கொடி கொடுத்ததாகவும், ஆனால் சொன்னபடி பூங்கொடி தவணையை செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் நெருக்கடிக்குள்ளான அந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. அதில், லட்சுமி இறந்து விடவே, பாஸ்கர் உயிர் பிழைத்தார். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த பூங்கொடியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை யாருக்கும் தெரியாமல், வீட்டைக் காலி செய்யச் சென்ற பூங்கொடியை, அக்கம்பக்கத்தின் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்